இன்றுள்ள பெரும்பாலான இணையத் தமிழர்களுக்கு,
சமணம்/ஜைனம் பற்றியப் புரிதல் இல்லை. சமணர்கள்/ஜைனர்கள் என்றால் வடக்கத்தி
மார்வாரிகளும், சேட்டுகளும் தான் ஞாபகத்திற்கு வருகிறார்கள். இந்து சகோதரர்கள் எல்லா
மாநிலங்களிலும் வாழ்வதுபோன்று சமணர்களும் (ஜைனர்கள்) எல்லா மாநிலங்களிலும்
வாழ்கிறார்கள். கர்நாடகத்தில் வசிக்கும் சமணர்களுக்கு கன்னடம் தாய்மொழி.
கேரளத்தில் வாழும் சமணர்களுக்கு மலையாளம் தாய்மொழி, அதுபோல் தமிழகத்தில் வாழும்
சமணர்களுக்கு தமிழ் தாய்மொழி. தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழ்ச் சமணத்திற்கு
இரண்டாயிரமாண்டுற்கும் மேலான தொன்ம வரலாறு உண்டு. தமிழுக்கு சமணர்கள் செய்தது பெரும்
பங்கு. தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களில் பெரும்பான்மை அவர்கள் அருளிச்
செய்ததுதான். அவைகள் சிலருக்கு தெரிந்திருந்தாலும், பலருக்கு இவை புதியச்
செய்திதான். அந்த பலருக்கு அவைகள் புதிய செய்தியாகயிருப்பதற்கு அவர்கள் சைவ / வைணவ இலக்கியங்கள் வழியாகத்தான் இதுவரைப் சமணத்தை பார்த்து வந்திருப்பதும் ஒரு
காரணமாகலாம். அதனால் சமணம் பற்றியப் பார்வை அவர்களுக்கு அந்த கலரில் தெரிந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. சைவ / வைணவ கண்ணாடி அணிந்துச் சமணத்தை எடைப்போட்டோரின் வலைத்தளங்கள்
நிறைய உண்டு. எனினும், என் இனிய வலையுலக நண்பர் தேவ் என்றழைக்கப்படும் தேவராசன்
ஐயா அவர்கள் தன் வலைத்தளத்தில் சில சமணம் பற்றியத் புரிதல்களை சைவ/வைணவ வழியேக் கட்டுரையாக
வரைந்திருக்கிறார்.
இக்கட்டுரை, அத்தவறான சமணப்
புரிதல்களை களைய வேண்டியும், வாசகர்களுக்கு சமணம் பற்றியப் புரிதல்
உண்மையானதாகயிருக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் எழுதப்படுகிறது. தேவ் ஐயா பண்பட்டவர்.
அவர் ஒருவரைப் பற்றிக் கடிந்து எழுதியதை யான் காண்டதில்லை! தவிரவும் அவர் இருமொழிப்
பண்டிதர். அவர் எழுதியக் கட்டுரைக்கு மறு பின்னூட்டாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.
இக்கட்டுரையைப் படித்தபின் அவர் தன் கருத்தை மாற்றிக் கொள்வார் என்று சிறு எதிர்ப்பார்ப்புடன்
எழுதுகிறேன்.
முதலில் தேவ் ஐயாவின் கட்டுரையைப்
படிக்கவும்.
திருக்குறள் சமண நூலா ? (பகுதி 1)
இனி என் மறுப்புக் கட்டுரையை அவர்
கருத்தின் ஊடாக எழுதுகிறேன். சிவப்பு எழுத்தில் அவர் கருத்துக்களையும், கருப்பு
எழுத்தில் என் கருத்துக்களையும் கொடுக்கிறேன். இனி, கட்டுரைக்குள் செல்வோம்!
சிறந்தஆய்வாளர்களுள்சிலர்திருக்குறளைச்சமணம்சார்ந்தநூலென்றும், சமணச்சிந்தனைகளேதிருக்குறளில்இடம்பெற்றிருக்கின்றனவென்றும்
கூறியுள்ளனர்.இவர்களுள்தமிழ்த்தென்றல்திரு.வி.க, பேராசிரியர்வையாபுரிப்பிள்ளைமயிலை.சீனிவேங்கடசாமிஆகியோர்
குறிப்பிடத்தக்கவர்கள்.
அந்த சிறந்த அறிஞர்கள் பட்டியல்
கீழேக் கொடுத்துள்ளேன்.
ஆனால்சமணத்தின்கோட்பாடுகளுக்குத்திருக்குறள்மாறாகஇருப்பதாகவே
தெரிகிறது.
சமணத்தின்மையமானகோட்பாடுகள் -
1) தீவிரமானஇறைமறுப்பு,
2) தீவிரமானஇன்னாசெய்யாமை
3) தீவிரமானதுறவு
Life is spirit, not physical matter.
Jainism is life affirming, but world denying.
Jains reject a materialistic lifestyle.
In general, Jainism is a study in extremes:
extreme atheism
extreme ahimsa
extreme asceticism
வலைத்தளத்தில்
இருந்து எடுத்துக் காட்டும்போது, அவ்வலைத்தளத்தின் தொடுப்பைக் கொடுத்தால்
படிப்போருக்கு ஈர்ப்பாயிருக்கும்!
தாங்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து எடுத்துக்
காட்டியிருக்கிறீர்கள்! சரிதானே!!
நமக்குத்
தேவைப்படும்போது வெளிநாட்டவர்கள் “அறிஞர்களாக” நம் கண்களுக்குத் தெரிகிறார்கள். தேவைப்படாத
போது, வெளி நாட்டவர்களுக்கு இந்திய இலக்கியங்களைப் பற்றி என்ன தெரியும் என்று
கேட்பது! அப்பா! என்னே மனிதனின் மனம்!! ;)
1.
தீவரமான இறைமறுப்பு – இது இந்தியத்
தத்துவங்களுக்கே உரித்தான கொள்கை. வேத மதங்கள் என்று முழங்கும் அறிஞர்கள் ஒன்றை
மறந்து விடுகிறார்கள். வைதிகப் பிரிவாகப் பிரிக்கப்படும் ஆறு தத்துவங்களாவன:
1.
பூர்வ மீமாம்சம்
2.
உத்தர மீமாம்சம் (இதையே பின்னாளில்
சங்கரர் வேதாந்தம் என்றார்)
3.
சாங்கியம்
4.
வைஷேடிகம்
5.
நியாயம்
6.
யோகம்
இவற்றில் பெரும்பாலான பிரிவுகள் இறைமறுப்புக்
கொள்கை கொண்டவைகள். இவைகளை எளிய தமிழில் அறிந்துக் கொள்ள எழுத்தாளர் ஜெயமோகன்
அவர்களின் வலைச்சுட்டியில் படிக்கவும்.
அதனால், இறைமறுப்பு என்பது இந்திய
தத்துவங்களுக்கு புதிதல்ல. பின்னாளில், வலிந்து பிரம்மவாதத்தைப் (பிரமமம்)
புகுத்தி இறை ஏற்கும் தரிசனங்களாக மாற்றப்பட்டது என்பது தனிக் கதை. சங்கருக்கு
முன்னரே உத்தர மீமாம்சம் என்ற தத்துவம் இருந்தது. சங்கரர் அவற்றுக்கு புது
பரிணாமத்தைக் கொடுத்தார் அவ்வளவே. பிறகு வந்த இராமானுஜர், மத்வர் போன்றோர்கள்
அவற்றை மேலும் விரித்துத் தங்கள் தங்கள் கொள்கையை நிலைநாட்டினார்கள். இவற்றிலிருந்து
கிளைத்ததுதான் தற்போது பெருஞ் சமயங்களாகத் திகழும் சைவம், வைணவம் என்ற பிரிவுகள்.
இதற்குமுரணாகவள்ளுவம்இறையைஒப்புக்கொள்கிறது.
ஒறுத்தலைவற்புறுத்துகிறது.
சமணமும்
இறைமையை அல்லது இறைத் தன்மையை ஒப்புக் கொள்கிறது. ஆனால், அதற்கு முழுமுதற்
கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை. குறள்
கடவுள் வாழ்த்தில் சொல்லப்படும் சொல்லடைகள் (Phrase) இறைத்தன்மையைக் குறிக்கிறதே தவிர எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை வலியுறுத்தவில்லை. காட்டாக, பொறிவாயில் ஐந்தவித்தான் என்ற சொல்லடையை
முழு முதற்கடவுள் கோட்பாட்டில் விளக்க முடியாது. சமண இறைத்தன்மைக்கும், சைவ, வைணவ
இறையனார்களுக்கும் உள்ள வித்தியாசத்தை, தமிழ் தென்றல் (திரு.வி.க) அவர்கள் மூலம்
விளங்கிக் கொள்வோம். இதோ அவரின் எழுத்தில்:
”திருவள்ளுவர் கடவுள்வாழ்த்தில் ஒரிடத்தில் ஒரு திறவு
வைத்துள்ளார்.அதற்கு அரணாக நூலினுள் பல குறிப்புக்களுண்டு. “பொறிவாயில்
ஐந்தவித்தான்:” என்பது அத்திறவு.
அத்திறவு கொண்டு கடவுள் வாழ்த்தைத்
திறந்து பார்த்தல் வேண்டும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது
ஒருபோது பொறிவாயில் ஐந்துடையானைக் குறித்தல் வெள்ளிடைமலை.முதலில்
பொறிவாயில் ஐந்துடையனாயிருந்து,
பின்னை அவ்வைந்தவித்த ஒருவனைத்
திருவள்ளுவர் “ஆதிபகவன்”
என்று போற்றியிருக்கிறாரென்பது
உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குவதொன்று.
பொறிவாயில் ஐந்துடையனாய்ப்பின்னை
அவ்வைந்தவித்த ஒருவனைஆதிபகவனாகப் போற்றுவது எச்சமயம்?
எங்கும் நீக்கமறநிறைந்து அசைவற்ற
ஒன்றை ஜைநம் மறுக்கின்றதில்லை.அவ்வசைவற்ற ஒன்று ஐந்தொழில்புரியாதென்பது ஜைநசித்தாந்தம்.“உற்பத்தியுநாசமும்
ஒன்றுமில்லாத பரஞ்சுடரே” என்பது ஜைநர் திருநூற்றந்தாதி.
எங்கும் நிறைந்த அசைவற்ற ஒன்றை
ஜைநமும் ஏற்கிறது; சைவமும் ஏற்கிறது.ஜைநம் அசைவற்ற ஒன்றிற்கு ஐந்தொழில் கூறுவதில்லை.சைவம்
பரம்பொருளுக்கு இருநிலை வகுத்து,
ஒன்றற்கு ஐந்தொழிலின்மையும், மற்றதற்குத்
தொழிலுண்மையுங் கூறுகிறது.அவ்விருநிலை சொரூபம் தடத்தம் என்பன.பொரூப
சிவத்துக்கு ஒன்றுமில்லை.“சிவனருவுருவுமல்லன் சித்தினோடசித்துமல்லன் – பவமுதற்றெழில்களொன்றும்
பண்ணிடுவரனுமல்லன்” (சைவசாத்திரம்).தடத்த சிவத்துக்கு ஐந்தொழிலுண்டு.
தடத்த சிவத்தைப் “பொறிவாயில்
ஐந்தவி ஆதிபகவனாகக் கோடலாகாதோவெனில்,
சைவ சாத்திரமுறைப்படி கோடலாகாதென்க. பிறவியெடுத்தல், பொறிவாயில்
ஐந்துபெறல், பின்னே அவைகளை அவித்தல்முதலியன பசுவிலக்கணமெனச் சைவசாத்திரஞ்
சாற்றுகிறது. தடத்த சிவத்தையும் பசுவர்க்கத்தில் சைவசாத்திரஞ் சேர்த்ததில்லை.ஆதலால்
திருவள்ளுவர்வழுத்திய ஆதிபகவனைத் தடத்தசிவமாகக் கோடற்குமிடமில்லையென்க. கடவுளியலில்
ஜைநமும் சைவமும் பிரியுமிடமிதுவாகும்.”
”நிணந்தீயில்இட்டன்னநெஞ்சினார்” என்பதிலுள்ளஉவமை
சமணத்தின்தீவிரமானகொல்லாமைநெறிக்குமுரணானது.
என்று என் நண்பர் திரு.பி.என்.குமார்
அவர்கள் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் சொன்ன கருத்துக்கள். ;) அவற்றை விடாமல் ஒர்
ஆதாரமாகப் பிடித்துக் கொண்டு வருவது வியப்பளிக்கிறது.
எடுத்துக் காட்டு உவமைகளும்,
உருவகங்களும் இல்லாமல், இலக்கியங்கள் செய்ய முடியுமா? அப்படிக் கொண்டால், அவைகள்
இலக்கியச் சோலைகளாகத் திகழ முடியுமா? இலக்கியப் பாலை வனங்களாகத் தான் அவைகள் காட்சியளிக்க்கும். சரி
கருத்துக்கு வருவோம்!
இவ்வாறு குறளாசிரியர் எழுதுவதற்கும் சமணத்தின்
கொல்லாமை நெறிக்கும் என்ன சம்பந்தம்? அனுபவ அறிவை மட்டும் கொண்டு தான் இலக்கியங்கள்
படைக்கப்படுகின்றன என்று கூறுவதுபோல் இருக்கிறது உங்கள் தரப்பு வாதம்.
இலக்கியம் படைக்க அனுபவ அறிவு மட்டுமின்றி,
பார்த்தல், கேட்டல், உணர்தல் மற்றும் அனுமானம் ஆகிய அறிவுகளைக் கொண்டு எழுதும்
போதுதான் அவை முழுமையான இலக்கியங்களாகப் பரிணமிக்க முடியும். குறளாசிரியர்,
அவ்வாறே கேட்டல் அல்லது பார்த்தல் அனுபங்களைக் கொண்டு அவ்வாறு எழுதியிருக்க
முடியும்!
மேலும், க்ரைம் நாவல் எழுதும்
எழுத்தாளர்கள் எல்லாம் குற்றம் புரிந்தவர்கள் என்று கூறமுடியுமா? சிந்திந்துப்
பாருங்கள்.
இவ்வாறெல்லாம் திருக்குறளை ஆராயக்கூடாது!
மற்றொன்று,
யான்தினமும், அலுவலகம் செல்லும் முன்
கசாப்புக் கடைகளைத் தாண்டி தான் இரயில் நிலையம் செல்லவேண்டும். உரித்த ஆடுகள்,
கோழிகளின் மாமிசங்களை எண்ணெய்த் தடவித் தொங்க விட்டிருப்பார்கள். இவற்றை எல்லாம்
பார்த்துக் கொண்டு செல்ல வேண்டியிருக்கிறது. என்ன செய்ய? ;)
இவற்றை பார்த்து “உரித்தக்
கோழியாட்டும்” என்று என்னால் உவமையாக எழுத முடியும். அதனால், அவைகள் எனக்கு
உடன்பாடு என்று சொல்ல முடியுமா? சிந்தனை செய்யுங்கள் ஐயா!
சமணத்தின்அதீதமானஉலகியல்மறுப்புக்குமாறாக
வையத்துள்வாழ்வாங்குவாழ்தலை
வள்ளுவம்சொல்கிறது.
நல்ல கற்பனை. திருக்குறளைப்
பொறுத்தவரை இரண்டையும் (இல்லறம், துறவறம்) சமமாகத்தான் பார்க்கிறது. ”பற்றற்றக்
கண்ணே பிறப்பறுக்கும் என்பது போல் துறந்து, பற்று அறுத்தவர்களுக்கே வீடுபேறுக்
கிட்டும். இல்லறம் ஏற்ற உயிர் இம்மண்ணின் கண் வாழ்வாங்கு வாழலாம். அவ்வாறு
வாழ்ந்து, தெய்வகதிக்கு செல்லவும் கூடும்; ஆனால், ஐந்தாம் கதியாகிய சிவகதிக்கு
அவைத் தகுதிப் பெறாது. யான், எனது என்னும் செருக்குகளை அறுத்த உயிர்களுக்குத்தான்,
வானோர்க்கும் அரிதாகிய உயர்ந்த உலகமான “உலகுச்சி” என்றழைக்கப்படும் சிலாதலத்தில்
புகமுடியும்.
அறத்தை இல்லறமாகவும், துறவறமாகவும்
பிரித்தல் ஒன்றே சமணம் சார்ந்தது. (இஃதொன்றே சாலும்). எதை ஏற்க முடியுமோ அல்லது ஏற்க நமக்கு தகுதியிருக்கிறதோ அவற்றை
ஏற்கலாம். அல்லது இல்லறம் ஏற்று வாழ்ந்து அனுபவித்து, அடங்கியப் பின்னர் துறவையும் மேற்கொள்ளலாம்.
என்பது தான் சமணம் சாற்றும் மரபு.
வாழ்வாங்கு வாழ்தல் பற்றிக் கீழ்
வரும் பாடல்,
”தான்பிறந்த இல்நினைந்து தன்னைக்
கடைபிடித்துத்
தான்பிற ரால்கருதற் பாடுணர்ந்து –
தான்பிறரால்
சாவ எனவாழான் சான்றோரால் பல்யாண்டும்
வாழ்கஎன வாழ்தல் நன்று” –
சிறுபஞ்சமூலம் – 68
”புல்லறத்தின் நன்று மனைவாழ்க்கை போற்றுடைத்தே
நல்லறத்தா ரோடு நடக்கலாம் –
நல்லறத்தார்க்கு
அட்டிட்டுண்டு ஆற்றவாழ்ந் தார்களே
இம்மையில்
அட்டிட்டுண்டு ஆற்றவாழ் வார்” –
சிறுபஞ்சமூலம் – 93
(துரை இராசராம் உரை: மனைவியோடு கூடிவாழும் இல்லற
வாழ்க்கையானது புல்லிய துறவறத்தை விட மேலானது. இல்லறத்திற்ச் சொன்னபடியே ஒழுகினால்
துறவறத்திற்கு ஒப்பாகக் கூறலாம் சிறந்த துறவறத்தாருக்குச் சமைத்து பகிர்ந்துண்டு
மிகவும் இனிதாக முற்பிறப்பில் வாழ்ந்தவர்களே இப்பிறப்பில் சமைத்துப் பலரோடு
பகிர்ந்துண்டு பிறர் போற்ற வாழ்வார்கள்.
ஆகலின் மக்கள் இல்லற வாழ்வில் நின்று
யாவர்க்கும் பயன்படுமாறு வாழ்தல் நன்றாம்.
“அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின்
புறத்தாற்றின் போஓய்ப் பெறுவ தெவன்” என்ற திருக்குறளோடு ஒப்பிட்டு நோக்குக.
அடுதல் – சமைத்தல்
(பதினெண் கீழ்க்கணக்கு – பக்கம்.154,
தெளிவுரை. வித்துவான் துரை.இராசாராம்)
என்ற அவரின் உரையில் குறளை ஒப்பிட்டதையும் நோக்க, வாழ்வாங்கு வாழ்தல்
என்றால் என்ன என்று அந்த சமண நூல் நமக்கு காட்டுகிறது. ஏற்றுக் கொள்வதாகயிருந்தால், இன்னும் எத்தனை எடுத்துக்
காட்டுகள் வேண்டுமானாலும் கொடுக்கலாம். இனிமேலாவது,
இல்லறம் சமணத்திற்கு உடன்பாடுதானா என்று கேட்காதீர்கள். இதை எழுதிக் கொண்டிருப்பவனும் ஒரு சமண இல்லறத்தான் என்பதையும் மறந்து விடாதீர்கள்! ;)
இன்னுமொரு காட்டுக் கொடுக்கிறேன்:
”எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
அல்லா விரத மனையா யவர்கட்குக்
கொல்லா விரதங் குடைமன்ன வாமெனின்
வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்”
– சூளாமணி – 2002
( - Kaviyogi Pandiyan
Although all austerities are alike
in domestic virtue, yielding good;
For those who cannot observe all,
Oh King of beautiful rising
shoulders with parasol!
If one can observe non killing
austerity
There is no vinai they cannot
vanquish)
மண்ணில்நல்லவண்ணம்வாழ்தலை,
கொண்டபெண்டிர்மக்கள்சுற்றத்தோடு
நல்லபதத்தால்மனைவாழ்தலைச்
சொல்லும்சமயக்கருத்துகளுக்கு
அணுக்கமாகத்திருக்குறள்விளங்குகிறது.
பஶ்யேமஶரத³:ஶதம்
ஜீவேமஶரத³: ஶதம்
ஶ்ருʼணுயாமஶரத³: ஶதம்
ப்ரப்³ரவாமஶரத³: ஶதம்
புலன்கள்மேலானவற்றில்ஈடுபட்டிருக்கும்நீடித்த, தரமான,
வளமானஉலகவாழ்க்கையைக்கோரும்
மறைமொழிகளையும்பார்க்கிறோம்.
மறைமொழிகள் இதுமட்டுமா சொல்கின்றன.
அவைகள் என்னென்ன சொல்கின்றன என்பதையும் நீலகேசி வாயிலாக நமக்கு தெரியத்தான் செய்கிறது!
அவைகள் குறளுக்கு எவ்வளவு ‘அணுக்கமாக” இருக்கிறது என்பதை தாங்களே கீழே உள்ள சுட்டியில் பார்த்துக் கொள்ளவும்!
நெடுமால், தாமரையாள், தவ்வை, இந்திரன்,
உலகியற்றியநான்முகன், அவியுணவு, அதைஏற்கும்
அமரர்கள், அதைஅளிப்போர், எழுதாமறைஆகியஅனைத்தையும்
சொல்லும்குறள் 63 சலாகாபுருஷர்களில்ஒருவரைப்பற்றியும்
ஒருஇடத்திலும்பேசவில்லை.
அதையே யானும் கேட்கிறேன். ”நெடுமால்,
தாமரையாள், தவ்வை,
இந்திரன், உலகியற்றிய நான்முகன், அவியுணவு, அதை ஏற்கும்
அமரர்கள், அதை அளிப்போர், எழுதாமறை ஆகிய அனைத்தையும் சொல்லும் குறள் நேரடையாகச் சிவனாரையோ, திருமாலையோ அல்லது
அவர்களது திருவுருவங்களான நடராஜ, அனந்த சயனகூருவுகளை ஏன் ஒரு இடத்திலும் கூடப் பேசவில்லை???
சமணத்தின்தேவர்கள்புலன்களைவென்றதால்
மேலுலகத்தில்வாழும்தகுதிபெறுகின்றனர்;
சமணம்அவர்களைப்புலன்களைவென்றவர்களாகவும்,
முக்திஅடைந்தவர்களைப்போற்றி, தீர்த்தங்கரர்களுக்கான
சமவசரணத்தைஅமைக்கும்பணிசெய்வோராகவும்
காட்டுகிறது. அமரருலகில்முப்பதுபகுப்புகள்;
அமரர்கள்நான்குவகையினர்என்றுசமணம்சொல்கிறது.
சமணத்தில் தேவர்கள் உண்டு என்று
ஏற்றுக் கொண்டதற்கு நன்றி தேவ் ஐயா. திருக்குறளில் தேவர்கள் பற்றிச்
சொல்லியிருக்கிறது, அதனால் குறள் சமணம் நூலல்ல என்று எழுதுகிறார்கள். சமண இந்திரனை கீழேச் சுட்டியுல் படிக்கலாம்.
வேதசமயத்தில்அமரர்கள்புண்ணியச்செயல்களால்
தேவருலகைஅடைந்தோராவர்.
அவர்களுக்கானபொறுப்புகள்வேறு;
அவர்கள்போகத்தில்ஆழ்ந்திருப்பவர்.
என்ன வேத சமயத்தில் அப்படிச் சொல்லியிருக்கிறதா?
எந்த வேதத்தில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது? சான்றுகள் கொடுங்களேன்!
அமுதம்பருகி, அவியுணவைஏற்றுப்
புண்ணியபலன்களின்மிகுதியால்போகத்தில்ஆழ்ந்திருக்கும்
அவர்களுக்குபிரமதேவர் ஒருமுறை
அறிவுறுத்தியதாகவும்அறிகிறோம்.
கதை நன்றாகயிருக்கிறது! திருக்குறளில் எங்கே இந்த கதைச் சொல்லப்பட்டிருக்கிறது என்றுச் சொல்லுங்கள் ஐயா?
அன்பின் ஐயா, எந்த ஒரு விளக்கக்
கட்டுரையோ, ஆராய்ச்சிக் கட்டுரையோ எழுதும் போது, தங்கள் கருத்துக்கு அரணாக இலக்கிய
ஆதாரங்கள் கொடுத்து எழுதவேண்டும் என்பது குறைந்தபட்ச விதி. அதுபோல ஒரு கருத்தை
மறுக்கும்போதும் அதற்கு தகுந்த தரவுகளைக் கொடுக்கவேண்டும்.
இவ்வாறு இரண்டும் இல்லாமல், வெறுமனே
இங்கே இப்படியிருக்கிறது, அங்கே அப்படியிருக்கிறது என்று கட்டுரை எழுதிக்
கொண்டுப் போனால், யாருக்கும் எந்த பயனும் இல்லை. தங்கள் எழுத்தை நம்பி (அறிஞர் உரை) மேற்கோள்
காட்டி வாதிடுவோர்த் தான் மிகவும் சிரமப்பட நேரிடும்.
வள்ளுவம்ஓர்இடத்தில்புலனடக்கம்இல்லாத
அமரர்களைச்சொல்கிறது.
எங்கே? தாங்கள் நினைக்கும் அந்தக் குறளுக்கு
பரிமேலழகர்ச் சொல்லும் உரைப் பொருத்தமற்றது! பொருத்தமான உரையைக் கீழே காணலாம்!
இலங்கைப்பெரும்புலவரானபுலோலி.தில்லைநாதநாவலர், வள்ளுவரைச்சமணரெனக்கொள்வதைத்திறம்படமறுத்துள்ளார்.
மயிலையார் பிறப்பால் சைவர். எனினும்,
நடுநிலைமையாகச் சமண சமயத்தைப் பற்றி அதிகம் எழுதியவரும் அவரே! சமணராகயிருந்து, பின்னர் சைவரான
அப்பர் பெருமான், எப்படி சமணக் கருத்துக்களை, சைவரான பின் எடுத்தாண்டுள்ளார்
என்பதை தன் கட்டுரையில் எழுதியுள்ளார். மலர்மிசை நடந்தவர்
சிவபெருமானாகயிருந்திருப்பின், அவ்வகையான திருவுருவங்களோ அல்லது ஓவியங்களோ
தொன்றுத் தொட்டு வழங்கிவந்திருக்கவேண்டும். அப்படி இருந்தால் காட்டுங்கள்? அல்லது நிகண்டு நூல்களிலாவதுக் காட்டுங்கள்??
’மலர்மிசையெழுதருபொருள்நியதமுமுணர்பவர்’
என்றுதிருஞானசம்பந்தமூர்த்திகளும், ‘ஏடாயாயதாமரைமேலியங்கினாரும்இடைமருதுமேவியஈசனாரே’ என்றுதிருநாவுக்கரசுநாயனாரும், ‘போதகந்தோறும்புரிசடையானடி’ என்றுதிருமூலர்திருமந்திரத்தாலும்,‘மனைகமலமறமலர்மிசையெழுதரும்’
எனத்திருவாய்மொழியில்சடகோபர்கூறுதலாலும், இம்மூர்த்திகளையெல்லாம்விடுத்து ‘மலர்மிசைஏகினான்”
எனநாயனார்அருகரைக்கூறினார்என்பதுபொருந்துமாபார்க்கவேண்டும்.
ஏன் பார்க்கவேண்டும்? ஏராளமான
இலக்கியச் சான்றுகளும், நிகண்டுகளும் நம் கண் முன்னயே இருக்கின்றனவே! என் பேச்சை
விடுங்கள். தாங்களே நிகண்டுகளை புரட்டுங்கள்! அவைகள் என்ன சொல்கின்றன என்று
பாருங்கள்! பார்த்துவிட்டு நடுநிலைமைக் கொண்டவராகயிருந்தால், நேர்மையாக
திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் சொல்லப்பட்டிருக்கும் குறிச் சொற்கள் சமணம்
சார்ந்தது என்று அறுதியிட்டுக் கூறுங்கள். அல்லது நிகண்டுகளை புரட்ட நேரமில்லையா? இதோ
யானே தருகிறேன். படியுங்கள்!
என்ன படித்துவிட்டீர்களா? மலர்மிசை
ஏகினவர்கள் யாவர்?
தில்லைநாத நாவலர்க் கொடுத்திருப்பது,
மிக பிற்காலத்தியச் சான்றுகள்.அதற்கு முன்னமே சமண இலக்கியங்களிலும்,
நிகண்டுகளிலும் மிலர்மிசை ஏகினான் என்பதை அருகருக்கும், புத்தருக்கும் விளங்கி
வந்திருப்பதைக் காணலாம்.
…
இலக்கியமுதன்மைச்சான்றுகள்
ஒன்று:
குறள்தோன்றியகாலத்திற்குசற்றுபின்னேதோன்றியதாகக்கருதப்படும்
நெஞ்சையள்ளும்சிலப்பதிகாரத்தில், நாடுகாண்காதையில்,
“பொருளில்யாக்கைபூமியில்பொருந்தாது
அருகர்அறவன்அறிவோற்கல்லதென்
இருகையும்கூடிஒருவழிக்குவியா
மலர்மிசைநடந்தோன்மலரடிஅல்லதென்
தலைமிசைஉச்சிதானணிப்பொறாஅது” - நாடுகாண்காதை (200 - 205)
இங்கு ஒன்றை நினைவுப்படுத்தவி ரும்புகிறேன். அஃதாவது, இளங்கோவடிகள் தம் சிலப்பதிகாரத்தில் பல சமயக் கடவுளர்களைப் போற்றிப்பாடியிருக்கிறார். ஆனால்,
மலர்மிசை நடந்தான் என்ற சொற்றொடரை அருகக்கடவுளை
தவிர வேறொரு கடவுளருக்கு பயன்படுத்தினாரில்லை.
இது இலக்கியச் சான்றுகளில் முதன்மையுடைத்து
என்பதில் ஐயமுண்டோ?
"அருகன்எண்குணன்நிச்சிந்தன்அறவாழிவேந்தன்வாமன்.."என்றுசூடாமணி
நிகண்டும், "அறவாழிவேந்தன்அரியணைச்செல்வன்" என்றுபிங்கலநிகண்டும் பேசும்.
அருகக்கடவுளுக்குஅறவாழிவேந்தன்என்பதன்றி, அறவாழிஅந்தணன்என்பதுபெயரன்மையால்கடவுள்வாழ்த்து
ஆதிதீர்த்தங்கரஸ்வாமிக்கானது
என்பதுபொருந்தாது.
அப்படியே கலந்துக்கட்டி
அடிக்கிறீர்கள்! ;-)
தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லவேண்டும். தெரியவில்லை என்றுச் சொல்ல தைரியம் வேண்டும் தானே! ;-)
சரி, தெரிந்துக் கொள்ளுங்கள். அருகனுக்கு அறவாழி அந்தணன் என்ற
பிரயோகம் உண்டு! இலக்கியச் சான்றுகள் படி அறவாழி அந்தணன் அருகர், புத்தர்
ஆகியவர்களுக்குத்தான் உண்டு!
இலக்கியஆதாரங்கள்
“தூண்டுதிண்டேருருள்போலச்சுழன்றுதொல்யோனிகட்கே
மீண்கொண்டேகுமவ்வெவ்வினைக்கஞ்சிநின்மெய்ச்சரணம்
பூண்டுகொண்டேனினிப்போகவொட்டேன்பொருளாகவென்னை
யாண்டுகொண்டாயறவாழிகொண்டேவென்றவந்தணனே” - திருநூற்றந்தாதி (27)
“ஆதியங்கடவுள்அறவாழிஅந்தணன்
அரியணைச்செல்வன்அருளாழிவேந்தன்” - திவாகரநிகண்டு
சரி.
என் தரப்பில் சான்றுகள் காட்டிவிட்டேன்! எங்கே தங்கள் தரப்பில் சான்றுகள்
காட்டுங்கள் பார்ப்போம்? :-)
சமணத்தின்அடிப்படைக்கொள்கைகளையும்வள்ளுவத்தையும்
ஒப்புநோக்கினால்பலஉண்மைகள்புலப்படும்.
சமணத்தின் அடிப்படைக் கொள்கை அகிம்சை
என்னும் கொல்லாமை அறம். கொல்லாமை என்ற தனிச் சொல்லை விளக்கப் புகுந்தால் விரியும் என்பதனால் இங்கே விடுவோம். எனினும்,
திருக்குறள் தன் அடிநாதமாக அகிம்சையைக் கொண்டு இலங்குகிறது என்பதுக் கண்கூடு. “ஒன்றாக நல்லது
கொல்லாமை” என்பதை இங்கு நோக்குக! அகிம்சை அறமே திருக்குறளின் முழக்கம்!
நிற்க!
வைதிகர்கள் போற்றுவது வேதங்களை.வேதங்களின் அடிநாதமாகயிருப்பது உயிர்ப்பலி யாகங்கள். அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று. (259) என்று குறள் கண்டிப்பதையும் காணலாம். இவ்வடிப்படைக்
கொள்கைகளை ஒப்பு நோக்கினால் குறள் சாற்றும் சமயம என்ன என்பதுப் புலப்படும்.
சமணச்சமயம்கடவுளைஏற்பதில்லை.உயிர்களுக்குக்கர்மபலன்களைப் (வினைகளை) நுகரவைக்கக்கடவுள்தேவையில்லைஎன்றும்,
கர்மங்கள் தாமாகவேதத்தம்பலன்களைத்தரும்என்றும்சமணம்கூறுகிறது.
ஆனால்வள்ளுவம்இதற்குமுற்றிலும்மாறுபட்டது.மக்கள்இறைநெறியில்
நின்றால்தான்துன்பங்களையும், வினைகளையும் கடக்க முடியும் என்று அதுவலியுறுத்துகிறது.உயிர்களுக்குக்கர்மங்கள்தாமாகவே (கடவுள் துணை இல்லாமல்)
பலன்களை விளைவிக்கும் என்பதை வள்ளுவர் சிறிதும் ஏற்கவில்லை என்பதைக்கீழுள்ளகுறட்பாக்களினால்நன்குஉணரலாம்.
கீழ்வரும் குறள்களை கொஞ்சம்
படியுங்கள்!
பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
பிற்பகல் தாமே வரும்.
– திருக்குறள் (319)
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். – திருக்குறள்
(207)
319ல் ”தாமே” என்றும் 207ல் ”வீயாது பின் சென்று அடும்” என்பதை
விளங்கிக் கொண்டாலே குறள் எல்லாம் வல்ல இறைவனை ஏற்கிறதா? அல்லது சமணம் காட்டும் வினைக் கோட்பாட்டை காட்டுகிறதா என்பது சொல்லாமலே விளங்கும்.
ஊழிற்பெருவலியாவுளமற்றொன்று
சூழினுந்தான்முந்துறும் – திருக்குறள் (380)
ஊழை விட பெரியது யாது உள என்று
வினவுகிறார் குறளாசிரியர். ஊழை விட ”எல்லாம் வல்ல” இறைவன் பெரியவன் என்று
நினைத்திருந்தால் அவர் அவ்வாறு கூறியிருக்க முடியுமா?
ஆனால், குறளுக்கு மாறாக தேவாரத்தில்
திருஞானசம்பந்தர் கூற்றாக வருவதைப் பார்போம்!
எந்த கோளும், கிரக நிலைகளும் என்ன செய்ய
முடியும் எம்பிரான் சிவபெருமான் இருக்கும்போது! என்ற சம்பந்த பெருமான் கூற்றை
இங்கு ஒப்பு நோக்குக.
அம்மட்டோ,
தெய்வத்தான்ஆகாதெனினும்முயற்சிதன்
மெய்வருத்தக்கூலிதரும்
– திருக்குறள் (619)
என்ற குறளை நோக்குக!
தெய்வத்தால் ஆகாது! எனினும் நீ
முயன்று முயற்சி செய்தால் அதற்குண்டான அல்லது முயற்சிக்குண்டான கூலி தரும் என்று
அழுத்தம் திருத்தமாக சொல்கிறார் குறளாசிரியர்.
பிறவிப்பெருங்கடல்நீந்துவர்நீந்தார்
இறைவன்அடிசேராதார்
சமண இறைவர்களை தீர்த்தங்கரர்கள்
என்றழைப்பர். தீர்த்தங்கரர் என்றால் பிறவி பெருங்கடலை கடக்க உதவுபவர் என்றுப்
பொருள். இருமொழிப் பண்டிதரான தங்களுக்கு யான் சொல்லித்தான் தெரியவேண்டுமா?
‘வகுத்தான்வகுத்தவகையல்லர்’
என்றும்கூறியிருப்பதால்ஊழைவகுப்பவன்இறைவன்என்பதேஅவர்
கருத்தாகும்.வகுத்தான்என்பதுஊழைக்குறிப்பதாயினும்ஈங்குஇறைவன்
என்றுபொருள்கொள்வதேஏற்புடைத்து.
தாங்கள்
விரும்பும் பரிமேலழகர் உரை:
கோடிதொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான்நுகரப்படும்பொருள்கள்கோடியைமுயன்றுதொகுத்தார்க்கும், வகுத்தான்வகுத்தவகையல்லால்துய்த்தல்அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லதுநுகர்தல்உண்டாகாது. (ஓர்உயிர்செய்தவினையின்பயன்பிறிதோர்உயிரின்கண்செல்லாமல்
அவ்வுயிர்க்கேவகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும் உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான் உயர்திணையாயிற்று.படையாதார்க் கேயன்றிப் படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை. வெறும் முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது நுகர்தல்ஆகாது, அதற்குஊழ்வேண்டும்என்பதாயிற்று.).
வேண்டுதல்வேண்டாமைஇலானடிசேர்ந்தார்க்கு – 4 என்றும்,
கே.என்.நீலகண்ட
சாஸ்திரி அவர்களின், தென்னிந்திய வரலாறு என்னும் பொத்தகத்தில் அப்பரைப் பெருமானைப்
பற்றிக் கூறும்போது,
”வைதீக
சைவக்குடும்பத்தில் இவர் பிறந்த போதிலும், இளமைப் பருவத்திற் சமண சமயம் இவரைக்
கவரவே, இவர் பாடலிபுத்திரம் (கடலூர்) என்னுமிடத்திள்ள சமணத்துறவிகளின் மடத்தில்
ஒரு துறவியாகச் சேர்ந்தார். மதநம்பிக்கையில் இவருக்கேற்பட்ட மாற்றத்தைக்
கவனித்துச் சொல்லொணத் துக்கமுற்ற இவருடைய தமக்கை சிவபெருமானின் உதவியை வேண்டிக்
கெஞ்சினார்.அவளுடைய பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது.துறவிமடத்திற் தருமசேனர்
என்ற பெயருடனிருந்த அவளுடைய சகோதரர், மாற்றமுடியாத குடல்நோய்க்கு ஆளானார்.மற்றைய
சமணத் துறவிகளால் அந்த நோயை மாற்றமுடியாமற் போகவே, தன் சகோதரியின் உதவியை நாடிப்
போக வேண்டிய நிர்ப்பந்தம் தருமசேனருக்கு ஏற்பட்டது.திருவதிகையிற் கோவில்
கொண்டெழுந்தருளியுள்ள கடவுளின் அருளினால் தம் தம்பியின் நோயைக் குணமாக்கினார்
தமக்கையார்.”
அவர் கூறுவதை சுருக்கமாக கீழேக் கொடுத்துள்ளேன்.
1.
அப்பர் பெருமானை, சமண
சமயத்திலிருந்து, சைவ சமயத்திற்கு திருப்ப, சிவனார் அப்பருக்கு கொடிய சூலை நோய்
உண்டாக்கினார்.
2.
அப்படி உண்டாக்கிய கொடிய குடல்நோயை,
பின் சிவனாரே போக்கியிருக்கிறார்.
இதை ஏற்றும் கொள்ளும் தாங்கள் குறள் “வேண்டுதல் வேண்டாமை இலான் என்று வைதிக
கடவுளைக் கூறுகிறது என்று கூறுகிறீர்கள். இது
தங்களுக்கு முரண் நகையாகத் தெரியவில்லையா?
இருள்சேர்இருவினையும்சேரா – 5 என்றும்,
அறவாழிஅந்தணன்தாள்சேர்ந்தார்க்கல்லால் – 8 என்றும்,
பிறவிப்பெருங்கடல்நீத்துவர் – 10 என்றும்,
பற்றுகபற்றற்றான்பற்றினை – 350 என்றும்,
திரும்பத்திரும்பஎல்லாவற்றிற்கும்மூலமுதல்வன்இறைவன்எனறே
அவர்கூறுவதால், இங்குவகுத்தான்| என்றுகூறியிருப்பதைஇறைவன்என்றுபொருள்கோடலேஏற்றது. வினையைவகுத்துஊட்டும்முதல்வன்இறைவனேயென்றுவள்ளும்கூறுவது
சமணத்துக்குநேர்மாறானது.இறைவனைமறுக்கும்சமணம்எங்கே?
இறைவனைஏற்கும்வள்ளுவம்எங்கே?இதுஅடிப்படைமாறுபடன்றோ!
மேலும், ஊழைக்காட்டிலும்வலிமையுடையதுவேறொன்றுஇல்லையென்றும், வினைப்பயனையாராலும்தவிர்க்கமுடியாதுஎன்றுவலியுறுத்துவதுசமணம்.
;-)
நச்சுனு ஒரு குறள் சொல்கிறேன் கேளுங்கள்!
ஊழிற்பெருவலியாவுளமற்றொன்று
சூழினுந்தான்முந்துறும் – திருக்குறள் (380)
வள்ளுவம்ஊழைஏற்றுக்கொண்டாலும்அதனைஉலையாஉழைப்பினால்
புறம்தள்ளலாம்என்பதுஅதன்துணிபு.இதுவும்சமணத்துக்கும்வள்ளுவத்துக்கும்
அடிப்படையிலுள்ளமுரணாகும்.வள்ளுவர் ஊழுக்கெதிராகள்
வினையுடைமையை வகுத்திருப்பது இந்தியச் சிந்தனைமரபில் ஒரு புதிய அத்தியாயம்கும்.
குறள் முழுக்க முழுக்க சமண சிந்தனைகளை தன்னகத்தேக் கொண்டிலங்கும் நூல். சமணக் கோட்பாட்டின்படி தன்னை
வெல்வதே வீரம் அல்லது வெற்றி, அவ்வாறு வென்றவரையே ஜினர் என்று தொழப்படுகிறார்கள். அவர்கள் ஜினராக உயர்ந்ததற்கு அவர்களின் விடாமுயற்சியேக் காரணம்.வெளியிலிருந்து
ஒரு வஸ்து தேவையில்லை. உன் வாழ்க்கை செம்மையுற உன் கையில்தான் உள்ளது. உன்னுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் நீதான் காரணம். உன்னுடைய கருமமே கட்டளைக் கல் என்பதும் குறள் அன்றோ!
”தன்னை
இறைவனாச்செய்வானும்தானேதான்தன்னைச்
சிறுவனாச்செய்வானும்தான்”
என்ற அறநெறிச் சாரக் கூற்றையும் இங்கு
ஒப்பு நோக்குங்கள்.
பெளத்தம்கூட, ஊழைவெல்லவேண்டுமெனக்கூறியிருந்தாலும், யாமறிந்தவரையில்மனிதமுயற்சிக்கு (ள்வினைக்கு) வள்ளுவம்தந்தஅழுத்தத்தைஅதுதரவில்லைஎன்பதேஉண்மையாகும்.
தெய்வத்தான்ஆகாதெனினும்முயற்சிதன்
மெய்வருத்தக்கூலிதரும் (குறள்.619) என்றும்,
ஊழையும்உப்பக்கங்காண்பர்உலைவின்றித்
தாழாதுஞற்றுபவர் -(குறள் 620) ; என்றும்
வள்ளுவம்பெரிதும்வலியுறுத்துவது, சமணத்துக்குமுற்றிலும்மாறானது.இக்கூற்றுஇந்தியத்தத்துவமரபுக்கேசிறப்புத்தருவது.
இஃது சமணத்தின் தனி சிறப்பாகும். இந்திய சமயங்களில் மற்ற சமயங்களில் காணப்படாதது. மற்ற சமயங்களில் முழுமுதற் இறைவன் துணையில்லாமல் வீடுபேறு அடையமுடியாது. ஆனால், சிரமண மதங்களில் அவ்வாறு கிடையாது. “முயற்சித் திருவினையாக்கும்” என்றாற்போல் முயன்றால் வீடுபேறு நிச்சயம் கிட்டும். இவ்விடத்தில் ஆசிவகத்திற்கும், சமணத்திற்கும் உள்ள கொள்கை
வித்தியாசத்தையும் ஓர்க!
"நன்னிலைக்கண்
தன்னை நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழிடு வானும் நிலையினும்
மேன்மே லுயர்ந்து நிற்பானும் தன்னைத்
தலையாச் செய்வானும் தான்" - நாலடியார் - 248
“தன்னிற் பிறிதில்லை தெய்வம் நெறிநிற்பில்
ஒன்றானுந்
தானெறி நில்லானேல்-தன்னை
இறைவனாச்
செய்வானுந் தானேதான் தன்னைச்
சிறுவனாச்
செய்வானுந் தான்” – அறநெறிச் சாரம் – 77
”பெருமைக்கும்
ஏனைச் சிறுமைக்குந் தத்தங்
கருமமே கட்டளைக் கல்” – திருக்குறள் – 505
என்ற சமண இலக்கியங்களில் முயற்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தையும் பார்க்கவும்.
ஆள்வினையுடைமையில் சமணத்தின் அசையாத் தன்மையையும், குறளின் “முயற்சித் திருவினையாக்கும்” என்பதையும்
பொருத்திப் பாருங்கள்; தங்களுக்கு உண்மை விளங்கும்.
சமணத்தின்உயிர்க்கொள்கைதுறவறமேயாகும்.சமணர்என்றாலேதுறவி
என்றேபொருளாகும்.துறவுபூண்டோரேவீடுபேறுஅடைவர்என்பது
சமணக்கொள்கை.சமணத்தைப்போன்றுபெளத்தம்அத்துணைக்கடுமையாகத்
துவவறத்தைக்கூறாவிடினும், ய்வாளர்கள் இரண்டு சமயங்களையும் துறவறச் சமயங்களென்றே கூறுவர்.வள்ளுவம் துறவறத்தை மேற் கொள்வது உண்டு.வள்ளுவர் அனைத்துப் பகுதியினர்க்கும் அறம்கூறவிழைந்தவராதலின், அவர் துறவறத்துக்கும் ஓரளவு இடம்தந்தார். எனினும் இல்லறத்தையே பெரிதும்போற்றினார்.
இல்லறமே
சிறந்ததெனில் துறவறம் பாடியிருக்கவேண்டிய அவசியமே இல்லையே. :-)
இல்லற தர்மமேற்றால் இம்மண்ணில்
வாழ்வாங்கு வாழலாம்! விரத, தான, தர்மங்கள் செய்து தேவர்களாகவும் ஆகலாம். ஆனால்
வாழ்வின் இலட்சியமான வீடுபேறுக் கிடைக்காது!
துறந்தவர்களுக்குத்தான் வீடுபேறு
உண்டு. யான், எனது என்ற செறுக்களை அறுத்தவனுக்குத் தான் வீடுபேறுக் கிட்டும்.
திருக்குறளில் இல்லறத்தில் வீடுபேறு கிடைக்கும் என்று எங்கு சொல்லப்பட்டிருக்கிறது
என்று சொன்னால் தாழ்மையுடன் ஏற்றுக் கொள்வேன்!
அறத்தாற்றின்இல்வாழ்க்கையாற்றின்புறத்தாற்றிற்
போஓய்ப்பெறுவதுஎவன்
(குறள் – 46)
துறந்தான்தூய்மைஉடையர்இறந்தார்வாய்
இன்னாச்சொல்நோற்கிற்பவர்
(குறள் – 159)
வையத்துள்வாழ்வாங்குவாழ்பவன்வானுறையும்
தெய்வத்துள்வைக்கப்படும்
(குறள் – 50)
இக்குறட்பாக்களின்வழித்துறவறத்தைத்தவிர்த்துஇல்லறத்தைஎப்படிப்
போற்றிவலியுறுத்துகிறார்என்பதைநன்குதெளியலாம்.
இவையாவும்சமணத்துக்குமாறானவையாகும்.
தாங்களா இவ்வாறு எழுதுவது? மிக
ஆச்சரியமாகயிருக்கிறது!!
திருக்குறள் இரண்டு இயலாகப்
பிரித்திருப்பதே சமணப் பகுப்பாகயிருக்கிறதே! கிழே சுட்டியைப் பார்க்க.
எங்கே, தங்கள் தரப்பில் சான்றுகள்
காட்டுங்கள் பார்ப்போம்?!!
அறத்துப்பாலிலுள்ள 38 அதிகாரங்களில்துறவறத்துக்கு 15 அதிகாரங்களும், 22 அதிகாரங்கள்இல்லறத்தார்க்கும், ஓர் அதிகாரத்தைமட்டும் இரு அறத்தார்க்கும் பொதுவாகவும்கூறியுள்ளார். ஏனையபொருட்பாலிலும்,
காமத்துப்பாலிலும்உள்ளஅதிகாரங்கள்யாருக்குஉரியனஎன்பதைப்பற்றிக்
கூறவேண்டுவதில்லை.
தாங்கள் கூறுவது சரிதான். காமத்துப்பால்
இல்லறத்தாருக்குத்தான். ஆனால், துறவறத்தாருக்கும் அது பொருந்தும் என்று தங்கள்
(வேத) மறைகளிலிருந்து ஏராளமான சான்றுகள் காட்ட முடியும் என்னால்!
கொடுத்தால் தாங்குவீர்களா?? ;-)
இவற்றிலிருந்துவள்ளுவரின்சமணத்துக்குமாறானஇல்லறக் கோட்பாட்டைநன்குஉணரலாம்.
சமணருக்குத்தேன்விலக்கப்பட்டஉணவு; வள்ளுவப்பெருந்தகைசாவகநோன்பினராயினும் (அணுவிரதியாயினும்), மாவிரதியாயினும்தேனைச்சுவைத்திருக்கவாய்ப்பில்லை; எப்படிஅதைஉதாரணம்கூறுகிறார் ?சமணரில்சாவகநோன்பினர்மருந்துக்கும்தேனைச்சேர்த்துக்கொள்வதில்லை.
இவையெல்லாம் தங்கள் எழுத்து என்று யன்னால்
நம்ப முடியவில்லை ஐயா. சராசரி எழுத்தாளர் போல் எழுதுகிறீர்கள். தங்களின் தரப்பு வாதம் வளர்ச்சி
வாதமாகத் தெரியவில்லை. :-(
”நிணந்தீயில்இட்டன்னநெஞ்சினார்” என்பதிலுள்ளஉவமை
சமணத்தின்தீவிரமானகொல்லாமைநெறிக்குமுரணானது.
ஏற்கனவே பதில் கூறிவிட்டேன்.
மறுபடியும் படிக்கவும் ஐயா!
சமணம், அச்சமயத்துறவிகளுக்குஏழுதர்மங்களைவிதித்தது.அத்தர்மத்தைஅவர்கள்
யதிதர்மம்என்றார். அவைஉலோசம், திகம்பரம்.நீராடாமை, தரையிற்படுத்தல்பல்தேய்க்காமை, நின்றுஉண்ணல், ஏகபுக்தம்என்பர்.வள்ளுவம்இவற்றிற்குமாறானது.
திகம்பரம்என்பதுஆடையின்றிஇருப்பதைகுறிக்கும்.வள்ளுவரோ ‘ஊணுடைஎச்சம்உயிர்க்கெல்லாம்வேறல்ல’ (1012) என்றும்,‘உடுக்கைஇழந்தவன்கைபோலும்’(788) என்றும் உடையின்இன்றியமையாமையைக்கூறுவதால் வள்ளுவர்திகம்பரத்துக்குமாறானவர்என்பதைஅறியலாம். மற்றும்அவர்புறந்தூய்மைநீரான்அமையும (298) என்று கூறுவதால்சமணம்கூறும்நீராடாமையைஏற்கவில்லைஎன்பதைஉணரலாம்.
இப்படி எழுதிவிட்டால், குறள் சமண நூலாகாது போகுமா? இதுவெல்லாம் வாதமே அல்ல. இருந்தாலும்,
இதை எழுதுகிறேன்! தாங்கள் சைவம் / வைணவம் / வேத சமயங்களை
இந்து சமயம் என்று கலந்துக் கட்டி அடிப்பதைப் போல, சமணத்தில் ஆடை ஏற்ற துறவியர்களை,
ஸ்வேதாம்பரர்கள் என்று அழைப்பர். அதனால் சமணத்தில் அது ஏற்புடையதே என்பதைத் தெரியப்படுத்துகிறேன். அதனால், தாங்கள் காட்டியத் தரவுகள் ஏலாது என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
காமம்வெகுளிமயக்கம்இவைமூன்றன்
நாமம்கெடக்கெடும்நோய்
(குறள் 360)
பரிமேலழகர்
உரையைப் படிக்கவும். எவ்வளவு சொதப்பியிருக்கிறார் என்பது விளங்கும்.
“..ஒருமூன்றவித்தோன்ஓதியஞானத்
திருமொழிக்கல்லதென்செவியகம்திறவா” – சிலப்பதிகாரப் பாடல்
எங்கே அழுத்தம் திருத்தமாக ஒரு
சான்றுக் காட்டுங்கள் பார்ப்போம்!
ஒழுக்கத்தைமிகவும்வலியுறுத்தியவள்ளுவர்சமணரின்முக்கியக் கோட்பாடானரத்நத்ரயத்தைவிளக்கினார்அல்லர்; ரத்நத்ரயம்என்பது நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் ஆகியவையாகும். சமணரின் முக்கியக்கோட்பாடானஅநேகாந்தவாதமும்குறளில்எங்கணும்
காணப்படவில்லை.
;-) இதுதான் வலையில் சிக்கிக் கொள்வது என்பது!! யானும் கேட்கட்டுமா?
மறைமொழிப்பட்ட வள்ளுவர் (தங்கள்
கூற்றில் தான்) ஏன், வேத சமயக் ஒழுக்கங்களைப் (கள் குடித்தல், பெண்டிருடன் கூடுதல்,
யாகத்தில் உயிர்க் கொலைப் புரிதல்) பற்றி ஏன் எந்த குறள்களிலும் சொல்லவில்லை? ;-)
சமணர்இன்னாசெய்யாமையைஎல்லைகடந்துவலியுறுத்தினர்.
மூக்கின்வழிகாற்றைஉட்கொண்டால்காற்றிலுள்ளநுண்ணுயிர்கள்
அழிந்துவிடும்என்பதற்காகமூக்கில்துணியைக்கொண்டுமூடிக்கொண்டனர்.
சமணர்கள் துணியை உபயோகிப்பதில்லை
என்று ஒருபக்கம் சொல்லிவிட்டு, சமணர்கள் துணியைக் கொண்டு மூடிக்கொண்டனர் என்று
மறுபக்கம் எழுதுகிறீர்கள். ஏனிந்த நகைமுரண்! ;-)
மரங்களைச்செதுக்குவதால்மரத்திலுள்ளநுண்ணுயிர்கள்அழிந்துவிடும்
என்பதற்காகத்தச்சுத்தொழிலையும், பூமியைத் தோண்டுவதால் உயிர்கள்மடியும்என்பதால்சுரங்கத்தொழிலையும் அவர்கள்தடைசெய்தனர். இதனால், பூமியைஉழுதால், மண்ணிலுள்ள புழு பூச்சிகள் அழிந்து விடும் என்பதற்காக உழவுத்தொழிலில்சமணர்கள் ஈடு
படக் கூடாதென அவர்கள்விதித்தனர்.
நல்ல வளமான கற்பனைகள். என்னுடைய
கற்பனைகளையும் கேளுங்கள்.
சமணர்கள் அமணமாகயிருப்பார்கள்.
சமணர்கள் உணவு உட்கொள்வதில்லை.
ஏனென்றால் காய்கறிகளில் உள்ள நுண்ணுயிர்கள் மடிந்துவிடும் என்பதால்!
சமணர்கள் நடப்பதில்லை, ஏனென்றால்
நடக்கும்போது, தரையில் உள்ள நுண்ணுயிர்கள் மடிந்துவிடும் என்பதால்!
சமணர்கள் தண்ணீர்க் குடிப்பதில்லை.
ஏனென்றால் தண்ணீரில் இருக்கும் நுண்ணுயிர்கள் மடிந்துவிடும் என்பதால்!
சமணர்கள் சுவாசிப்பதில்லை. ஏனென்றால்
சுவாசிக்கும்போது காற்றில் உள்ள நுண்ணுயிர்கள் மடிந்துவிடும் என்பதால்!
இது எப்படியிருக்கிறது. தங்கள்
வாதத்திற்கு அனுகூலமாகச் சான்றுகள் கிடைக்கவில்லை என்பதற்காக இப்படியா எழுதுவது? :-))))
‘பஹ்வந்நம்குர்வீத’ என்றுஅருமறைவேளாண்மையைச்
சமூகக்கடமையாக்குகிறது, அதுவும்தூய ஆன்மிகம்பேசும்
உபநிடதப்பகுதியில்.
84.
(Some) declare that agriculture is something excellent, (but) that means of
subsistence is blamed by the virtuous; (for) the wooden (implement) with iron
point injuries the earth and (the beings) living in the earth.
(சிலர்பயிர்த்தொழில்நல்லதொழிலென்றுநினைக்கிறார்கள். அந்தத்தொழில்பெரியோர்களால்இகழப்பட்டது. ஏனெனில், இரும்பைமுகத்திலேயுடையகலப்பையும்வெண்வெட்டியும்நிலத்தையும். நிலத்திலுண்டானபலபலஉயிர்களையும்வெட்டுகிறதல்லவா? (மனு,
அதிகாரம் - 10, சுலோகம் - 84)
5. By Rita shall be understood the
gleaning of corn; by Amrita, what is given unasked; by Mrita, food obtained by
begging and agriculture is declared to be Pramrita.
Pramrita என்பதின் பொருள் பண்டிதரான தங்களுக்கு யான்
விளக்கவேண்டியதில்லை!
தேவ்ஜி இன்று போய் நாளைப்
பார்க்கலாமா?
இரா.பானுகுமார்,
சென்னை